கருணாநிதி குறித்து பேச்சு... சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு!

 
கருணாநிதி சீமான்
 


முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக கரூர் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். 

இன்று சீமான் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள்!

அதேபோல ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி தாந்தோணிமலை காவல் நிலையம், எஸ்.பி. அலுவலகத்திற்கும் இது குறித்து புகார் அனுப்பினார்.இவற்றில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி வழக்கு தொடர்ந்தார். கடந்த மாதம் 7ம் தேதி இவ்வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. 

கருணாநிதி

அப்போது, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், இந்த வழக்கில் அனுமதி வழங்கி தாந்தோணிமலை காவல் நிலையம் இவ்வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தாந்தோணிமலை காவல் நிலையத்தில் நேற்று அவதூறாக பேசுதல், இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசி இணையதளத்தில் வெளியிடுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!