கஞ்சா விற்பனையில் போலீசாருக்கும் தொடர்பு.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி!

 
கஞ்சா

தமிழகத்தில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை ஒடுக்க தமிழக அரசும், காவல்துறையும் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். கஞ்சா வியாபாரிகள் மீது கடுமையான பிரிவில் வழக்குப்பதிவு செய்து, வங்கி கணக்குகளை முடக்கி கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்த இரண்டு போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த சம்சுதீன் என்பவர், கடந்த ஆண்டு கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. 

கஞ்சா

அதாவது, கஞ்சா வாங்கி விற்ற இவரிடம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் காவலராக பணி புரிந்து வந்த சரவணன் (37), பெருந்தொகையை லஞ்சமாக பெற்றுள்ளார் என்பது தெரிய வந்தது. சம்சுதீன் கைதான தகவலறிந்ததும் தலைமறைவான இவரை, போலீசார் தேடி வந்தனர். 

கஞ்சா

தொடர் தேடுதலுக்கு பிறகு தலைமறைவாக இருந்த சரணவனை 2 நாட்களுக்கு முன்னர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்லடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் மற்றொரு காவலர்  அருண்பாண்டியனுக்கும் (32)  கஞ்சா தொழிலில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து நேற்று இரவு அவரையும் தேவகோட்டை போலீசார் கைது செய்தனர். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web