களைக்கட்டும் பொங்கல் திருவிழா... ஜன.17 வரையில் கோயம்பேட்டில் சிறப்பு சந்தை!
தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கியுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் பொதுமக்களின் வசதிக்காக பொங்கல் சிறப்பு சந்தை தொடங்கியுள்ளது.
அங்காடி நிர்வாகக் குழு சார்பில் இந்த சிறப்பு சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று பொங்கல் சிறப்பு சந்தை துவங்கிய நிலையில், முதல் நாளே அதிக அளவிலான பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து கரும்பு, மொச்சை முதலானவைகளை வாங்கி சென்றனர்.

மொத்தம் 7 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கரும்பு, காய்கறிகள் உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனையாளர்களும் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர்.
விழுப்புரம், திண்டிவனம், கடலூர், மதுரை, சேத்தியாதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்புகள் வரவழைக்கப்பட்டுள்ளன. பொங்கலை முன்னிட்டு கோயம்பேடு சந்தை முழுவதும் பண்டிகை களையுடன் காணப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
