இன்று முதல் விடுபட்டவர்களுக்கு ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்!

 
பொங்கல் பரிசுத்தொகுப்பு

இதுவரையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்காதவர்களுக்கு இன்று முதல் மீண்டும் விநியோகிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொங்கல் திருநாளையொட்டி அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்குவதாக அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு மற்றும் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 8-ந்தேதி தொடங்கி வைத்தார். டோக்கன்கள் வழங்கப்பட்டு பரிசுத் தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டன.

பொங்கல் பரிசுத்தொகுப்பு

இந்நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்த பின்னரும் சுமார் 90 சதவீத ரேஷன் அட்டைதாரர்களுக்கே பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கப்பணம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. சிலர் பல்வேறு காரணங்களால் இந்த உதவிகளை பெற முடியாமல் விடுபட்டுள்ளனர்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு

இதையடுத்து, விடுபட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் நாளை முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை வினியோகம் தொடரும் என்றும், விடுபட்டவர்கள் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றும் ரேஷன் கடை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!