பொங்கலை முன்னிட்டு 5 நாட்களுக்குத் தொடர் விடுமுறை - அரசாணை வெளியீடு!
பொங்கல் பண்டிகையை மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று உற்சாகமாகக் கொண்டாட ஏதுவாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொதுவாகப் பொங்கல் பண்டிகைக்கு 3 அல்லது 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 14 (புதன்): போகிப் பண்டிகை - விடுமுறை தொடக்கம்.
ஜனவரி 15 (வியாழன்): தைப்பொங்கல்.
ஜனவரி 16 (வெள்ளி): மாட்டுப் பொங்கல்.
ஜனவரி 17 (சனி): உழவர் திருநாள் / காணும் பொங்கல்.
ஜனவரி 18 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். விடுமுறை முடிந்து மீண்டும் ஜனவரி 19-ஆம் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியூர்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவதற்குப் போதிய கால அவகாசம் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பொங்கல் ஸ்பெஷல் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், மக்கள் நிம்மதியாகப் பயணம் செய்யவும் இந்த 5 நாள் விடுமுறை பேருதவியாக இருக்கும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
