பொங்கல் விடுமுறை.. 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளில் பயணம்!

 
பேருந்து

தமிழகத்தில் பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு பலரும் குடும்பத்தினருடன், உறவினர்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் நிலையில் கடந்த 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

நாளை  தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், உறவினர்களுடன் சேர்ந்து பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்குப் படையெடுத்துச் செல்கின்றனர்.

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், கடந்த 3 தினங்களாக ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்துகளிலும், ரயில்கள் மற்றும் விமானங்களிலும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர். மக்கள் பயணத்திற்காக தமிழ்நாடு அரசும் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது.

தற்போது ரயில்களில் அனைத்து டிக்கெட் முன்பதிவுகளும் நிரம்பி விட்டதால், அரசு பேருந்துகளில் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு பயணித்து வருகின்றனர்.

திடீர் மாரடைப்பு!! பயணிகளை காப்பாற்றி,  உயிரை விட்ட அரசு பேருந்து ஓட்டுநர்!!

இந்நிலையில் பொங்கல் சிறப்பு பேருந்துகளில் கடந்த 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு போக்குவரத்துத்துறை தனது எக்ஸ் வலைதளத்தில், "தமிழ்நாடு அரசு 
போக்குவரத்து துறையின் சார்பில், பொங்கல் திருநாளினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில், 2,092 பேருந்துகளும், 1,858 சிறப்பு பேருந்துகளும் ஆக 3,950 பேருந்துகளில் 2,17,250 பயணிகள் பயணம் செய்தனர். கடந்த 10.01.2025 முதல் 12.01.2025 இரவு 12 மணி வரை 11,463 பேருந்துகளில் 6,40,465 பயணிகள் பயணித்துள்ளனர்" என்று அதில் பதிவிட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!