பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பரிசு... நாளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜனவரி 8) சென்னையில் தொடங்கி வைக்கிறார். சென்னை ஆலந்தூரில் உள்ள நசரத்புரம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு நேரடியாக பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கி தொடங்கி வைக்கிறார். 
இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மக்களுக்கு இந்த பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதால் திருவிழா காலத்தில் குடும்பங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் நிதி உதவி கிடைக்கும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது. இதற்காக, தமிழக அரசு சார்பில் ரூ.248 கோடியே 66 லட்சத்து 17 ஆயிரத்து 959 நிதி ஒதுக்கி அரசு அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரொக்கப் பரிசும் சேர்த்து மொத்தம் ரூ.6 ஆயிரத்து 936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
