பொங்கல் ... டோக்கன் வாங்காதவங்க இந்த தேதியில வாங்கிக்கோங்க!

 
டோக்கன்

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை சென்னை ஆலந்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய தேதியிட்டு டோக்கன் பெற்றவர்கள் காலை முதலே கடைகளில் வரிசையில் காத்திருந்து பரிசைப் பெற்றனர்.

நாளை முதல் கொரோனா நிதி! வீடு வீடாக டோக்கன் விநியோகம்!

அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது. பரிசு விநியோகம் தொடங்கியதால், டோக்கன் வழங்கும் பணி இன்று முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை டோக்கன் பெறாதவர்கள் ஜனவரி 13-ம் தேதி நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று பரிசுத் தொகுப்பையும் ரொக்கத்தையும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கன்

தமிழகம் முழுவதும் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைவார்கள். பல மாவட்டங்களில் அமைச்சர்கள் பொங்கல் பரிசு வழங்கலை தொடக்கி வைத்தனர். சில இடங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தற்காலிகமாக விநியோகம் நிறுத்தப்பட்டு, பின்னர் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!