பூந்தமல்லி - போரூர்... டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் துவங்கியது!

 
ரயில்
டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் 2ம் கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை 3 மணிக்கு பூந்தமல்லி - போரூர் இடையே 9 கி.மீ. தூரம் துவங்கியது. 

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.

ரயில்

இதில் பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் ரெயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் சேவை தொடங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

முன்னதாக கடந்த மாதம் 20ம் தேதி இந்த தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. 2.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்நிலையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது.

பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web