2027ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு... அரசிதழில் வெளியீடு!

இந்தியாவில் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2021ல் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்த முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 ம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. இத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்து வருகின்றன.
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக இன்று அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீா், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய யூனியன் பிரதேசங்களில் மட்டும் 2026 அக்டோபா் 1ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும், இந்தியாவின் பிற மாநிலங்களில் 2027ம் ஆண்டு மாா்ச் 1ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக 2 கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!