அதிர்ச்சி!! மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!! அனல்மின் நிலையத்தில் தொழிலாளர்கள் தொடர் போராட்டம்!!

 
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்

தூத்துக்குடியில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் மற்றும் தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனம் இணைந்து அமைத்துள்ள மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நிறுவனமான என்டிபிஎல் அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. 

இங்கு 1000-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர். இரு அலகுகள் மூலம் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அனல் மின் நிலையத்தின் பெரும்பாலான பணிகளை ஒப்பந்தத் தொழிலாளர்களே செய்து வருகின்றனர். நிரந்தரப் பணியாளர்களுக்கு குறைந்த அளவிலேயே பணி கொடுக்கப்படுவதாக புகார் எழுந்தது.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்

இந்தநிலையில், ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்எல்சி அனல் மின் நிலையத்தைப் போல் ஊதியம் வழங்க வேண்டும், இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும், தொழிலாளர்களுக்கு எதிராக என்டிபிஎல் நிர்வாகம் தொடர்ந்துள்ள வழக்கை திரு்மபப் பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நான்காவது நாளை எட்டியுள்ளது. 

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்

சுமார் 800 பேர் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இப்போராட்டத்தால் மின்சார உற்பத்தி படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி மின் உற்பத்தி 560 மெகாவாட்டாக இருந்தது. போராட்டம் நீடித்தால் மின் உற்பத்தி மொத்தமாக நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்.டி.பி.எல். நிர்வாகம் சார்பில் மாற்று தொழிலாளர்கள் சிலரை அனல்மின்நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இவர்களை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வழிமறித்து திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த வேலைநிறுத்த போராட்டத்தை முன்னிட்டு என்டிபிஎல் அனல்மின் நிலைய பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . இப்போதே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்ட நிலையில்  மின் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உருவாகுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

 

From around the web