வருடத்தின் கடைசி நாள்... இந்த பகுதிகளில் எல்லாம் மின் தடை!
தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மாதம் தோறும் பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை டிசம்பர் 31ம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாகவும், இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கல் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பூண்டி, ராகவாம்பாள்புரம், அய்யம்பேட்டை மற்றும் மேலாத்தூர் ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
திருவாரூர் மாவட்டத்தில் கட்டிமேடு, அதிரெங்கம் மற்றும் சேகல் ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
அதே போல் சென்னை வடக்கு பகுதியில் ஜிபிடி சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, ஜி.ஆர்.கண்டிகை, புதிய ஜிபிடி பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், எஸ்.பி.பேட்டை, ஐயர் கண்டிகை, எஸ்.ஆர்.கண்டிகை, என்.ஆர்.கண்டிகை, ஜி.ஆர்.கண்டிகை, முழு கும்மிடிப்பூண்டி பஜார் (ஜி.என்.டி சாலை) பெத்திக்குப்பம் ரயில்வே பாலம் வரை, பாலகிருஷ்ணாபுரம், மா.பொ.சி. நகர், வேர்காடு, ரெட்டம்பேடு மெயின் ரோடு, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், சோலியம்பாக்கம் மற்றும் தேர்வழி ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!