நாளை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின்சார நிறுத்தம்!
தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதிவாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை மே 19ம் தேதி திங்கட்கிழமை தலைநகர் சென்னையில் மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சென்னையில் நாளை (19.05.2025) அன்று காலை 09:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் தடையின்றி கொடுக்கப்படும் எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி பட்டாபிராம் பகுதியில் முழு பட்டாபிராம் மற்றும் சேக்காடு, ஐப்பன் நகர், தந்துறை, ஸ்ரீதேவி நகர், கண்ணபாளையம், கோபாலபுரம், விஜிஎன் நகர் பகுதிகளில் மின் நிறுத்தம் ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
