கர்ப்பமான தந்தை.. காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்றி நெகிழ்ச்சி!
இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சஹத்- ஜியா, தாங்கள் பெற்றோர் ஆகியுள்ளதாக அறிவித்துள்ளனர். அவர்களின் நடத்திய கர்ப்பகால போட்டோஷூட் தற்போது நாடு முழுவதும் டிரெண்டாகி வருகிறது.
கேரள மாநிலம் கோழிக்கோடு உம்மலத்தூர் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் சஹத்- ஜியா. மூன்றாம் பாலின தம்பதியான இவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ தொடங்கியதில் இருந்தே அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதில் சஹத் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறினார். அதேபோல ஜியா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். ஜியா ஒரு நடனக் கலைஞர். சஹத் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார்.
திருமணம் செய்துக்கொண்டு ஒன்றாக வாழ்ந்துவரும் இருவரும் ஒரு குழந்தையை தத்தெடுக்க முயன்றுள்ளனர். இருப்பினும், இருவரும் மூன்றாம் பாலினத்தவராக இருந்ததால் சட்ட ரீதியாக அவர்களுக்கு பல சிக்கல்கள் எழுந்துள்ளன. அதன்பின்னர் தான் தாங்களே குழந்தையை பெற்றெடுப்பது என முடிவு செய்தனர்.
சஹத் ஆணாக மாறியிருந்தாலும் கூட அவரால் கருத்தரிக்க முடியும் என்பதை அறிந்து மருத்துவரை அணுகியுள்ளனர். பாலின மாற்று அறுவை சிகிச்சையில் சஹாத்தின் மார்பகங்கள் அகற்றப்பட்ட போதிலும், கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் இன்னும் அகற்றப்படாமல் இருந்தது. இதன் காரணமாகவே அவரால் கர்ப்பமாக முடிந்துள்ளது. பெண்ணாக மாறிய ஜியா மூலம் சஹத் கருவுற்றார். இவர் இப்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார்.
8 மாத கர்ப்பத்தில் இருக்கும் சஹாத் ஜோடிபோட்டோஷூட் ஒன்றை நடத்தி வெளியிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது. தன்னால் குழந்தை பெற முடியாது என்பதால் சஹத் குழந்தை பெறுவதாக ஜியா மகிழ்ச்சியடைந்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு, தாய் பால் வங்கியில் இருந்து தாய்ப்பாலை வாங்கி குழந்தைக்கு தரவும் முடிவு செய்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க