அதிர்ச்சி... புகார் அளிக்க சென்ற கர்ப்பிணி காவலரால் பாலியல் பலாத்காரம்.. 3 வயது மகன் கண்முன் கொடூரம் !

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் மாவட்டம், சன்கணீர் காவல் நிலையத்தில், காவலராக பணிபுரிந்து வருபவர் 48 வயது பாகா ராமா. இவர் பணிபுரிந்த காவல் நிலையத்திற்கு தனது 3 வயது மகனுடன் 32 வயது பெண் ஒருவர் புகார் அளிக்க வந்திருந்தார். அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ததாக கூறிய காவலர், பெண்ணை வெள்ளிக்கிழமை அன்று இரவு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த கொடுமை அவரது 3 வயது மகன் கண்முன் நடந்தேறியது. அக்கம் பக்கத்தினர் மீது புகார் அளிக்கச் சென்றபோது, காவலர் பெண்ணை விடுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்திருப்பது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பெண்ணின் மகனை பிணையக்கைதி போல பிடித்து வைத்துக் கொண்டு இந்த காரியத்தை செய்துள்ளனர்.
இந்த கொடுமை குறித்து பெண்மணி இரண்டு நாட்கள் கழித்து புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற உயர் அதிகாரிகள் காவலரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!