பணிகள் விறுவிறுப்பு... பரந்தூர் விமான நிலையம் நிலங்களுக்கான விலை நிர்ணயம்... அரசாணை வெளியீடு!

சென்னையில் மேம்படுத்தப்பட்ட 2 வது விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதற்கான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. இதற்காக பாதுகாப்பு அமைச்சகம், விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம், தேசிய பசுமை தீர்ப்பாயம் உட்பட பல்வேறு துறைகள் முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளன.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலங்களுக்கான விலையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள 3,331.25 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ 35 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2.57 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி உரிமையாளர் எவ்வளவு நிலம் வைத்துள்ளார் என்பதன் அடிப்படையில் அவர் எந்த பகுதிகளுக்குள் வருகிறார், அந்த பகுதியில் ஒரு ஏக்கருக்கு விலை எவ்வளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என நிர்ணயிக்கப்படும். இதனை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான இழப்பீடு கணக்கீடு செய்யப்படும். அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை செய்யப்பட்ட உடனடியாக அந்த தொகையை அவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!