பூசாரியின் தலையில் குழவி கல்லை போட்டு கொலை... கொத்தனார் பரபரப்பு வாக்குமூலம்!

புதுச்சேரி தவளக்குப்பத்தில் வசித்து வருபவர் சுந்தர். இவர் கோவில் பூசாரி. இவருக்கும் கொத்தனாரான தமிழரசன் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இச்சம்பவம் நடந்த போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கோபத்தில் தமிழரசன் குழவி கல்லை எடுத்து சுந்தரியின் தலையில் போட்டுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே சுந்தர் தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுந்தரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாய் தகராறு காரணமாக சுந்தரை கொலை செய்ததாக தமிழரசன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!