பிரதமர் மோடிக்கு இலங்கையில் உயரிய விருது !

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளார். அங்கு அவருக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான மித்ர விபூஷண விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதினை அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயக வழங்கி கௌரவித்துள்ளார். பாங்காக் சென்றிருந்த பிரதமர் மோடி நேற்று இரவு இலங்கை சென்றார். இலங்கையில், அந்நாட்டு அதிபருடன் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்நாட்டின் உயரிய விருதான மித்ர விபூஷண விருதினை அதிபர் அநுர குமார திசநாயக பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார்.
இந்த விருதினைப் பெற்றுக் கொண்ட பிரதமர், திருக்குறள் சொல்லி தனது நன்றியை தெரிவித்தார். அதன்படி செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல வினைக்கரிய யாவுள காப்பு எனும் நட்பின் பெருமையை உணர்த்தும் திருக்குறளை பிரதமர் மோடி கூறினார். அதாவது, நட்பு கொள்வது போன்ற அரிய செயல் வேறுஎதுவும் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றுமில்லை என்று விளக்கமும் பிரதமர் மோடி அளித்துள்ளார். பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகவுடன் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் நிறைவாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
கொழும்பில் பேசிய பிரதமர் மோடி, இலங்கைக்கு இந்தியா இக்கட்டான காலக்கட்டங்களில் உதவியிருக்கிறது. இலங்கையில் தீவிரவாத தாக்குதல், கொரோனா காலகட்டங்களில் என இந்தியா உதவியிருக்கிறது. அது மட்டுமல்ல, பொருளாதரா நெருக்கடியில் இலங்கை தவித்தபோது இந்தியா துணை நின்றதை இங்கே நினைவுகூர்கிறேன் எனக் கூறியுள்ளார். முற்பகலில் நிறைவு செய்யும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து தமிழகத்தின் மண்டபம் கடலோர காவல் படை ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். அங்கு நடைபெறும் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வகையில் அவரது பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!