தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை முயற்சிகள் வியப்பளிக்கிறது - பிரதமா் மோடி

 
மோடி

‘தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை முயற்சிகளைக் கண்டு நான் வியப்படைந்தேன். நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். மேலும், மண்ணின் வளம், ஈரப்பதம் மற்றும் வேளாண்மையின் நீண்டகால நிலைத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு இந்த முறை பெரிதும் உதவும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இதுதொடா்பாகப் பிரதமா் மோடி தனது ‘லிங்க்ட்இன்’ சமூக ஊடகப் பக்கத்தில் எழுதியுள்ள கட்டுரையில் இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் கோவை நகரில் கடந்த நவம்பா் 19-ஆம் தேதி நடைபெற்ற ‘தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில்’ பலதரப்பட்டோரின் பங்களிப்பைக் கண்டது தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் சந்தித்தவர்களில் விஞ்ஞானிகள், வேளாண் உற்பத்தியாளா் அமைப்புகளின் தலைவா்கள், பாரம்பரிய விவசாயிகள், மற்றும் அதிக சம்பளம் தரும் பெருநிறுவன வேலைகளை விட்டுவிட்டு மீண்டும் இயற்கை வேளாண்மைக்குத் திரும்பிய பட்டதாரிகள் உள்ளிட்டோர் அடங்குவர்.

உஷார்!! பிரதமர் கிசான் யோஜனா திட்டம்! ஜனவரி 1ம் தேதிக்குள் இதைச் செய்யலைன்னா ரூ.6,000 கிடைக்காது!!

இயற்கை வேளாண்மை என்றால் என்ன?

இயற்கை வேளாண்மை என்பது இந்தியாவில் காலங்காலமாக இருக்கும் பாரம்பரிய அறிவையும், புதிய சுற்றுச்சூழல் கொள்கைகளையும் பயன்படுத்தி, எந்தவித ரசாயனமும் இல்லாமல் பயிா்களை வளா்ப்பதாகும். செடிகள், மரங்கள், கால்நடைகள் ஆகியவற்றை ஒரே இடத்தில் வைத்து, இயற்கைச் சூழலை (பல்லுயிா்த்தன்மை) ஆதரிக்கும் ஒரு பல்வகைப்பட்ட பண்ணை முறை இதில் பின்பற்றப்படுகிறது.

பண்ணையில் உள்ள கழிவுகளை மறுசுழற்சி செய்வது, மண்ணில் காற்றோட்டத்தை அதிகரிப்பது போன்ற வழிமுறைகள் மூலம் மண்ணின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.

தமிழக விவசாயிகளின் அபார முயற்சிகள்
கோவை மாநாட்டில் சில தமிழக விவசாயிகளுடன் தாம் கலந்துரையாடியபோது, அவா்களின் முயற்சிகள் மிகவும் அபாரமானவை என்று பிரதமா் மோடி பாராட்டியுள்ளார்.

முக்கியமாக அவர் குறிப்பிட்ட சில உதாரணங்களில், ஒரு விவசாயி 10 ஏக்கா் நிலத்தில் வாழை, தேங்காய், பப்பாளி, மிளகு, மஞ்சள் எனப் பல பயிா்களுடன், 60 நாட்டு மாடுகள், 400 ஆடுகள் மற்றும் கோழிகளையும் வளர்த்து வருகிறார்.

விவசாயம் விளைநிலம் பயிர் நெற்கதிர்

பாரம்பரிய நெல்:

மற்றொரு விவசாயி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி போன்ற பாரம்பரிய நெல் வகைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதோடு, அதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களையும் தயாரிக்கிறாா்.

பட்டதாரி வழிகாட்டி:

ஒரு முதல் தலைமுறை பட்டதாரி, 15 ஏக்கரில் இயற்கை வேளாண்மை செய்து, 3,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பயிற்சியும் அளித்து, மாதம் சுமாா் 30 டன் காய்கறிகளை விற்பனை செய்கிறாா்.

அழைப்பும் அவசியமும்

ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைச் சார்ந்து இருப்பது மண்ணின் வளம், அதன் ஈரப்பதம் மற்றும் நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றைப் பாதித்துள்ளது என்று சுட்டிக்காட்டிய பிரதமா், இயற்கை வேளாண்மை இந்தச் சவால்களைச் சமாளிக்கும் வழி என்று வலியுறுத்தினார். இது செலவினைக் குறைத்து, மண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

மத்திய அரசின் ‘தேசிய இயற்கை வேளாண்மை இயக்கம்’ மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் ஏற்கெனவே இந்த முறையைப் பின்பற்றி வருவதாகக் கூறிய மோடி, இயற்கை வேளாண்மையைப் பின்பற்றுவது குறித்து சிந்திக்க நாட்டின் ஒவ்வொரு விவசாயிக்கும் அழைப்பு விடுத்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!