வைரல் வீடியோ... சிறையில் கைதிகள் டீ, பக்கோடாவுடன் தடபுடல் பார்ட்டி...!

 
சிறைக்கைதிகள்

பஞ்சாப் மாநிலத்தில்  லூதியானா சிறையில் விசாரணைக்கைதி  மணி ராணா . சமீபத்தில் இவருடைய பிறந்தநாள் வந்த நிலையில்  சிறையில் உள்ள கைதிகளுடன் பிறந்தநாளைக் கொண்டாட முடிவு செய்தார். இதனையடுத்து சிறைக்குள்ளேயே  மணி ராணா, அனைவருக்கும் டீ, பக்கோடா  விருந்து வைத்து  பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார்.இது குறித்த  வீடியோ வெளியாகி  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்த வீடியோவில் வரிசையாக உட்கார்ந்திருக்கும்  கைதிகள் அனைவரும் கைகளில்  தட்டு, சில்வர் டம்ளருடன்  "இன்று சகோதரர் மணியின் பிறந்த நாள்" என கோஷமிடுகின்றனர். இந்த கொண்டாட்டத்தை கைதிகள் முறைகேடாக தாங்கள் வைத்திருந்த செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.இது  குறித்து சில கைதிகள் சிறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.  சிறை அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட  விசாரணையில்  அச்சமடைந்த கைதிகள்   பிறந்தநாள் கொண்டாட்ட ஆதாரங்களை அழிக்கவேண்டி மொபைல் போன்களை உடைத்து  சேதப்படுத்தினர்.

சிறைக்கைதிகள்


இருப்பினும் கைதிகள் சிறைக்குள் தடபுடலாக பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.   சிறைக்குள் செல்போன் நெட்வொர்க் மற்றும்  சிக்னல் கிடைப்பதைத் தடுக்க ஜாமர்கள் பொருத்தப்படும். இதற்கான  நடவடிக்கை மேற்கொள்ள உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web