இல்லத்தரசிகளுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி... தனியார் பால், தயிர் விலை மீண்டும் உயர்வு!

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பால் சந்தையில் 84 சதவீதம் தனியார் நிறுவனங்கள் தான் செயல்படுத்தி வருகின்றன. அவை கூட்டணி அமைத்துக் கொண்டு நிர்ணயித்து வருகின்றன. பிப்ரவரியில் ஏற்கனவே தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியிருந்த நிலையில், ஹட்சன் நிறுவனத்தின் ஆரோக்கியா பால் விலை லிட்டருக்கு ரூ.4, தயிர் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது.
இதனால் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டர் ரூ.82-க்கும், அரை லிட்டர் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பால் சந்தையில் 84 சதவீதம் தனியார் நிறுவனங்களிடம் உள்ளன. அதனால் அவை கூட்டணி அமைத்துக் கொண்டு நிர்ணயிப்பது தான் பால் விலை என்றநிலை உருவாகி விட்டது. தனியார் நிறுவனங்களில் கட்டணக் கொள்ளையை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது தான் ஏமாற்றம் அளிக்கிறது என வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!