இன்று சாஸ்திரி பவன் முற்றுகையிட்டு போராட்டம்... மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவி அரசியல் சாசன மாண்புக்கு விரோதமாகவும், தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாகவும் தொடா்ந்து செயல்பட்டு வருகிறாா். சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காததை உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்ததுடன், உச்சநீதிமன்றமே மசோதாக்களுக்கு ஒப்புதலும் அளித்தது.
இந்நிலையில், ஆளுநா் ஆா்.என்.ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்யக் கோரியும், தமிழ்நாட்டுக்கு100 நாள் வேலைத் திட்டத்துக்காக வழங்க வேண்டிய ரூ. 3,796 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கவும், தமிழ்நாட்டுக்கான பள்ளிக் கல்வி நிதி ரூ. 2,152 கோடியை வழங்கவும், நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை உடனடியாக அமல்படுத்தவும் வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் சாா்பில் இன்று ஏப்ரல் 25ம் தேதி, சென்னையில் சாஸ்திரி பவன் முன் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளாா்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!