மீனவர்கள் ரயில் நிலையத்தில் போராட்டம்... காரைக்காலில் பரபரப்பு!

 
போராட்டம்

இந்தியாவில் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மேனாக  கிராமத்தில் வசித்து வருபவர்  செந்தமிழ்.  மீனவர் மீது  துப்பாக்கி சூடு நடத்தி இலங்கை கடற்படை 13 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு 9 மாத சிறைத்தண்டனை, ரூ 40 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  இலங்கை கடற்படையை கண்டித்தும் கண்டுகொள்ளாத புதுச்சேரி மற்றும் மத்திய  பாஜக அரசை கண்டித்தும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள்  வார காலமாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 12ம் தேதி போராட்டத்தை  அறிவித்த மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் கருப்புக்கொடி போராட்டம் இருசக்கர வாகன பேரணி என பல்வேறு கட்டத்தில் அரசுக்கு தங்களுடைய எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளனர்.  

போராட்டம்

மத்திய, மாநில அரசை கண்டிக்கும் வகையில் காரைக்கால் ரயில் நிலையத்தில் தஞ்சாவூர் செல்லும் பயணிகள் ரயிலை மறித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தண்டவாளத்தில் படுத்தும் அமர்ந்தும் மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி ஒன்றிய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து பெண்கள் உட்பட  மீனவர்களை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தி ரயிலை போலீசார் புறப்பட செய்தனர். அப்போது மீனவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது புதுச்சேரி மற்றும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் கைது நடவடிக்கையை கையில் எடுத்த காவல்துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். 

இலங்கை அரசிடம் தங்களுடைய படகு சிக்கி இருப்பதால்  21 நாட்களாக தவிர்த்து வருவதாகவும் உடனடியாக தங்களுடைய படகுகளை விடுவிக்க ஒன்றிய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  கண்ணீர் மல்க படகின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.  புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஒரு பிரம்மச்சாரி, அதே போல  பிரதமர் மோடி ஒரு பிரம்மச்சாரி இருவருக்கும் தாய்மை உணர்வு என்றால் என்னவென்று தெரியாது ஆகையால் குண்டடிப்பட்டு சிக்கித் தவிக்கும் எங்களுடைய பிள்ளைகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

போராட்டம்
காரைக்கால் மாவட்டத்தில் கிழிஞ்சல் மேடு கோட்டுச்சேரி மேடு கீழ காசாக்குடி மேடு உட்பட  11 மீனவகிராமங்களை சேர்ந்தவர்கள் இதுவரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மீனவர்கள் மட்டுமின்றி மீன்பிடி தொழிற்சாலை 5000க்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரம் இழந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டு இருப்பதாக  மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் புதுச்சேரி மீன்வளத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நாளைய தினம் காரைக்கால் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக  மீனவ கிராம நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?