விஜய் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு... தடையை மீறி ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு? சீறும் சமூக ஆர்வலர்கள்!

தவெக தலைவரும் முண்ணனி நடிகருமான விஜய் ஜனநாயகன் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் சென்றிருந்தார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி பகுதியில் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக நேற்று முன்தினம் இரவு வருகை தந்தார். இங்குள்ள பட்லங்காடு பகுதியில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் தங்கியுள்ளார். நேற்று தாண்டிக்குடி கிராமத்தின் மலை உச்சியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட தனியாருக்கு சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
படப்பிடிப்பு பகுதிக்கு செல்லும் சாலை தாண்டிக்குடியில் இருந்து கரடு முரடான, ஏற்ற இறக்கமான பாதையாக அமைந்து இருப்பதால் சரக்கு வாகனம், ஜீப் போன்ற வாகனங்கள் மட்டுமே அப்பகுதிக்கு சென்று வருகின்றன. விஜய் ஜீப் மூலம் படப்பிடிப்புக்கு சென்றிருந்தார். பொதுமக்கள் யாரும் படப்பிடிப்பு தளத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
இப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு விவசாய பணிகளுக்கு செல்பவர்களை மட்டும் அனுமதித்து வருகின்றனர். இதற்காக படப்பிடிப்பு தளத்தை சுற்றி காவலர்கள், பவுன்சர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களில் கோடை காலங்களில் காட்டுத்தீ அதிகளவில் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதால் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய் படக்குழுவினர் முறையாக அனுமதி பெற்றாலும், இந்த காலங்களில் அதாவது ஏப்ரல், மே மாதங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தடை இருந்தும் இவர்கள் எப்படி அனுமதி பெற்றார்கள் என கேள்வி எழுந்து வருகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!