பொதுமக்களே.. உஷார்.. இதையெல்லாம் செய்தால் உங்க மொத்த பணமும் காலி.. காவல் ஆணையர் எச்சரிக்கை!

 
காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் பொது மக்களுக்கான சேவைகளும், வாய்ப்புக்களும் அதிக அளவில் கிடைக்கிறது. அதே நேரம், இணையவழி குற்றமான சைபர் குற்றங்களும் தினந்தோறும் உருமாறிக் கொண்டே வருகின்றன. சமீபகாலத்தில் இரண்டு புதுவகையான சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளது.

1. யூ- ட்யூப் வீடியோக்களை லைக் செய்யும் படி கூறி, பிறகு பகுதி நேர வேலை வாய்ப்பு அல்லது முதியோருக்கு வீடு என்ற பெயரில் மோசடியில் ஈடுபடுவது. குற்றவாளிகள் டெலிகிராம் அல்லது வாட்ஸ் ஆப்பில் யூ- ட்யூப் வீடியோக்களை லைக் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று தொடர்பு கொள்கிறார்கள். உஷாராக இருங்க.

சில வீடியோக்களை லைக் செய்த பிறகு, பகுதி நேர வேலை அல்லது சிறிய அளவிலான முதலீடு செய்து பெரும் லாபம் அடையலாம் என்று ஆசை காட்டுவார்கள்.  அதை உண்மை என்று எண்ணி தொடர்ச்சியாக பேசும் பொதுமக்களிடம் ஒரு போலி வெப்சைட் முகவரியைக் கொடுத்து, லாகின் செய்யச் சொல்லி முதலில் சிறிய அளவில் பணத்தைக் கட்டச் சொல்வார்கள்.

ஆன்லைன் மோசடி

முதலில் லாபமாக சில ஆயிரங்களில் பணம் திரும்பக் கிடைக்கும். அதை நம்பி அதிக அளவில் பணத்தை பொதுமக்கள் செலுத்துவார்கள். அதற்கேற்றார் போல பெரிய தொகை அந்த வெப்சைட்டில் காட்டப்படும்.  ஒரு கட்டத்தில் வெப்சைட்டில் காட்டும் பணத்தை எடுக்க முயற்சிக்கும் போது, பல்வேறு கட்டணங்களான 'வித் டிரா பீஸ்', 'பிராசசிங் பீஸ்' என்று கட்டச் சொல்லுவார்கள். பணம் கட்டத் தவறினால், அந்த கணக்கு காலாவதி ஆகி விடும் என்று பயமுறுத்துவர்கள். திரும்பத் திரும்ப அவர்கள் கேட்கும் பணத்தை கட்டினாலும் கூட, ஒரு போதும் பொதுமக்களுக்கு அவர்கள் பணம் வந்து சேராது, சிலநாட்களில் வெப் சைட்டை 'டவுஸ்" செய்து மொத்தமாக தடயங்களையும் அழித்து விடுவர். 

2. வங்கியில் இருந்து அனுப்புவது போல மோசடி மெசேஜ் அனுப்பி பொது மக்களின் பெயரில் லோன் எடுத்து மோசடி செய்வது:

குற்றவாளிகள், சில தனியார் வங்கிகளின் லோகோவை வாட்ஸ் ஆப் டிபியாக வைத்துக் கொண்டு, அந்த எண்ணில் இருந்து பொதுமக்களுக்கு வங்கி அனுப்புவது போல மெசேஜ் அனுப்புவர். அதில் வங்கி கணக்கோடு ஆதார், பான் கார்டு இணைக்கவில்லை என்றால் வங்கிக் கணக்கு பிளாக் செய்யப்படும் என்று கூறி லிங்க் ஒன்று தரப்பட்டிருக்கும். அந்த லிங்க்கை கிளிக் செய்தால் குறிப்பிட்ட வங்கியின் முகப்பு பக்கம் போன்றே காட்சியளிக்கும். அதில் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொண்டு பொதுமக்கள் லாகின் செய்யும்போது, அந்த தரவுகள் சைபர் கிரிமினல்களுக்கு சென்று விடும்.

ஆன்லைன் மோசடி

பொதுமக்களின் வங்கி தொடர்பான தரவுகளை வைத்துக் கொண்டு, அவர்களில் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை திருடுவதுடன், வங்கிகளின் வெப் சைட் மற்றும் மொபைல் செயலிகளில் உள்ள இன்ஸ்டன்ட் லோன் வசதியை பயன்படுத்தி பொதுமக்கள் பெயரில் லோன் எடுத்து, கிரெடிட் ஆகும் பணத்தை கிரிமினல்கள் தங்கள் கணக்குக்கு உடனடியாக மாற்றி விடுகின்றனர். இதனால் எடுக்காத லோன் பணத்துக்காக பொதுமக்கள் மற்றும் வங்கிகள் பாதிக் கப்படுகின்றன.

எனவே. முன்பின் தெரியாதவர்கள் சொல்வதை நம்பி எந்த வெப்சைட்டிலும் பணத்தை கட்ட வேண்டாம். பான் கார்டு, ஆதார். கார்டுகளை அப்டேட் செய்ய வேண்டும். என்று வரும் லிங்க் குகளை கிளிக் செய்ய வேண்டாம். இணையவழியில் உலாவும் போது கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் எச்ரிக்கை செய்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web