பொதுமக்களே உஷார்... செக் பண்ணி வாங்குங்க... ஆட்டுக்காலில் நெளிந்த புழுக்கள்!

 
பொதுமக்களே உஷார்... செக் பண்ணி வாங்குங்க... ஆட்டுக்காலில் நெளிந்த புழுக்கள்!

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள மோர்பட்டியில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார். 30 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் வடமதுரை ரயில் நிலைய சாலையில் உள்ள ஒரு இறைச்சிக்கடையில் ஆட்டுக்கால்களை வாங்கி வீட்டிற்கு கொண்டு சென்றார். சமையலுக்காக ஆட்டுக்காலை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அதில் புழுக்கள் நெளிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இதையடுத்து அவர் இறைச்சிக்கடைக்கு சென்று கேட்டதற்கு இறைச்சிக் கடைக்காரர் முறையாக பதில் தராமல் அலட்சியமாக பேசியிருக்கிறார். விரக்தியடைந்த கிருஷ்ணக்குமார் ஆட்டுக்காலுடன் வடமதுரை போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். போலீசார் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் ராமசாமி சம்பந்தப்பட்ட இறைச்சி கடைக்கு சென்று ஆய்வு நடத்தினார். அதில் பழைய இறைச்சியை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து இறைச்சிக்கடை மூடி சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு உறையினர் வடமதுரையில் சில இறைச்சிக்கடைகாரர்கள் இறந்த ஆடுகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து அதிக லாபம் பெறும் நோக்கில் விற்பனை செய்து வருகின்றனர். எனவே இறைச்சி வாங்கும் பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். ஆட்டுக்காலில் புழுக்கள் நெளிந்த காட்சிகளின் வீடியோ அந்த பகுதியில் சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web