பொதுமக்களே உஷார்.... எலிகளுக்கு 3 மணி நேரத்துக்கு ஒருமுறை டீ, காபி மற்றும் ஜூஸ் ... சர்க்கரை நோய், உடல் பருமன்... அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!

 
எலி

 
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில்  டாட்டா இன்ஸ்டியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் பணிபுரியும்  அறிவியலாளர்கள், சர்க்கரை நோயின் விளைவுகள் குறித்து புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த ஆய்வில், சில எலிகளை தேர்வு செய்து, தினமும் 4 முதல் 5 தடவைகள் வரை சர்க்கரை கலந்த டீ, காபி மற்றும் குளிர்பானங்களை வழங்கியுள்ளனர். ஒவ்வொரு 3  மணி நேரத்திற்கும் ஒரு முறை இந்த பானங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆய்வு  தொடர்ந்து 2 ஆண்டுகள் நடைபெற்று வந்தது.

எலி

 

இந்த ஆய்வு முடிவில், அந்த எலிகள் அனைத்திற்கும் டைப்–2 வகை சர்க்கரை நோயும் உடல் பருமனும் ஏற்பட்டிருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது போன்ற சர்க்கரை கலந்த பானங்களை அடிக்கடி குடிக்கும் பழக்கம், மனிதர்களுக்கும் அதேபோன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். குறிப்பாக, தினமும் 2 வேளை இனிப்பான டீ, காபி போன்ற பானங்களை குடிக்கும் நபர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும், இது உடல் உறுப்புகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும்  தெரிவித்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் எலி கைது

 டீ, காபி போன்ற பானங்களில் உள்ள ‘சுக்ரோஸ்’ எனும் இயற்கை இனிப்புப் பொருள், கல்லீரல் தசைகள் மற்றும் சிறுகுடல்களில் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.  பொதுமக்கள் இனிப்பான பானங்களை தவிர்த்து, அதிக அளவில் சர்க்கரை இல்லாத பானங்களை குடிப்பதை பரிசீலிக்க வேண்டும். அதே நேரத்தில்  குளிர்பானங்களை முற்றிலும் தவிர்ப்பது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது எனவும் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

 

 

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web