இனி வருஷத்துக்கு 2 தடவை 10 ,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு!

இந்தியாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தான் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. அந்த வகையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயத்தோடே தேர்வை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் 2026லிருந்து வருடத்துக்கு இரண்டு முறை சிபிஎஸ்இ தேர்வு நடைபெற இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் சிபிஎஸ்இ இணைந்து 2026 முதல் 10, 12வது போர்டு எக்ஸாம் வருடத்துக்கு இரண்டு முறை நடத்தலாம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கத்தை பொறுத்தவரை மாணவர்களுக்கு தேர்வு தொடர்பாக டென்ஷன குறைக்கவும், தேர்வுக்கு சிறப்பான முறையில் தயாராகுறதுக்கு சான்ஸ் கொடுக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் சிபிஎஸ்இ போர்டு எக்ஸாம் பிப்ரவரி-மார்ச் மாதத்தில் நடைபெறும். புது திட்டத்தின்படி-முதல் எக்ஸாம் ஜனவரி-பிப்ரவரில நடக்கலாம். இண்டாவது எக்ஸாம் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜூன் மாதம் சப்ளிமென்ட்ரி/இம்ப்ரூவ்மென்ட் தேர்வு நடக்கலாம் என கூறப்படுகிறது. இதனால்மாணவர்கள் மன அழுத்தம் குறையும், ஒரே தேர்வை நம்பி இருக்கறதுக்கு பதிலா, மாணவர்களுக்கு 2 சான்ஸ் கிடைக்கும். முதல் தேர்வில் நல்ல மார்க் கிடைக்கவில்லையென்றால் இரண்டாவது எக்ஸாம்ல இம்ப்ரூவ் பண்ணிக்கலாம். மாணவர்களுக்கு தேர்வில் தோல்வி அடைவோம் என்ற பயம் இல்லாத நிலை உருவாகும், சப்ளிமென்ட்ரி தேர்வோடு போர்டு எக்ஸாம் எழுத கூடுதல் சான்ஸ் இருக்கும்.
மற்றொரு முக்கிய முடிவாக கல்வி அமைச்சகம் "சிபிஎஸ்இ குளோபல் கரிக்குலம்" ஆரம்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய பாட திட்டம் 2026-27 கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வரும். இதனால் இந்திய கல்வி முறை இன்டர்நேஷனல் தரத்திற்கு உயரும் என கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடும் என கூறப்படுகிறது. இந்த திட்டம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த திட்டத்தை விரைவில் மக்களோட கருத்துக்காக முன் வைப்போம், பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!