மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி - பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்!
மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்குள் இந்தியாவின் பி.வி.சிந்து நுழைந்துள்ளார். கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பானின் யமாகுச்சியுடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிந்து சிறப்பாக விளையாடி 21-11 என முதல் சுற்றை வென்றார்.

தொடர்ந்து நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் யமாகுச்சிக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியிலிருந்து விலகினார்.

இதனால் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். ரசிகர்கள் மற்றும் இந்திய விளையாட்டு ஆர்வலர்கள் இதனை மிகுந்த உற்சாகத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
