தமிழகத்தையே உலுக்கிய கோரம்!! பட்டாசு குடோன் வெடி விபத்தில் 8 பேர் பலி!! பலர் கவலைக்கிடம்!!
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்றும் வழக்கம் போல் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பட்டாசு குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த கோர வெடி விபத்தில் குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
இதனால் பக்கத்தில் இருந்த அடுத்தடுத்த குடோனிலும் தீப்பற்றிக் கொண்டது. கட்டிடங்கள் சுக்கு நூறாக உடைந்தன. பணியில் இருந்த ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணிகளிலும் , தீயை அணைப்பதிலும் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதில், 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதம் உள்ளவர்களில் 7 பெண்கள் உட்பட 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதிலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அங்கு தொடர்ந்து மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க