சிவன் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா... திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தூத்துக்குடியில் சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பழமையான பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா இன்று மாலை 4.45 மணிக்கு நடந்தது. ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும் கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தனர்.
இதை முன்னிட்டு கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாரணை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து காெண்டனர். ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம், தனுசு ராசியைச் சேர்ந்த பக்தர்கள் தேங்காய் பழம் எள்ளு தானமாக கொடுத்து பரிகாரம் செய்தனர். பின்னர் சனி பகவானுக்கு எள்ளு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டனர். பூஜைகளை சண்முகம் பட்டர் நடத்தினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!