நாளை தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி.. பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்!

 
ராகுல்

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கியிருக்கும் நிலையில், அதிகாரத்தில் பங்கு என்று தமிழக காங்கிரஸில் எதிரொலிக்க துவங்கியிருக்கிறது. தவெகவுடன் கூட்டணி வைக்கவும் தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து நிலவி வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் நாளை தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி, நீலகிரி மாவட்டம் கூடலூரில் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் அவர், பள்ளி  மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி நாளை ஜனவரி 13ம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகை தருகிறார். இந்த வருகையால் நீலகிரி அரசியல் வட்டாரங்களில் கவனம் அதிகரித்துள்ளது.

ராகுல்

கூடலூரில் உள்ள புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி வருகிறார். பள்ளி மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாட உள்ளார்.

ராகுல் காந்தி

பொன்விழா நிகழ்ச்சி முடிந்ததும் ராகுல் காந்தி அங்கிருந்து கேரள மாநிலத்திற்கு புறப்பட்டுச் செல்கிறார். அவரது இந்த குறுகிய பயணமும் கூடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!