’பயோ’வை மாற்றிய ராகுல்!! தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்பி!! வைரலாகும் ட்வீட்!!

 
ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையில் மோடி சமூகத்தினரை தரக்குறைவாக பேசியிருந்தார். இது குறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை அளித்தது. இந்த தீர்ப்பு இந்திய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையில் மக்களவையில் இருந்தும், எம்பி பதவியில் இருந்தும் அவரை தகுதி நீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை பாராளுமன்ற செயலகம் அறிவித்தது.

ராகுல்காந்தி

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், கோவா, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தப் போராட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி


இந்நிலையில், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்களில் தனது கணக்கின் பயோவில் ‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி’ என ராகுல் காந்தி மாற்றியுள்ளார். ‘இது ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்.  இதற்கு முன், வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினர் என தனது பயோவில் குறிப்பிட்டிருந்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web