10வது தேர்ச்சியடைந்தவர்களுக்கு ரயில்வே 9900 காலி பணியிடங்கள்... முழு விபரம்!

 
இந்தியன் ரயில்வே

10வது மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில், ரயில் ஓட்டுனர் எனப்படும் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot (ALP)) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மொத்தம் 9900 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வரும் 09.05.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Assistant Loco Pilot (ALP)

காலியிடங்களின் எண்ணிக்கை: 9900

இந்திய ரயில்வே பணியிடம்

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும் அல்லது Diploma in Engineering or Bachelor's Degree in Engineering படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 19,900

தேர்வு முறை:

இந்தப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, கணினி வழி ஆப்டிடியூட் டெஸ்ட் ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சபரிமலை மண்டல பூஜைக்கு சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே!!

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் பத்தாம் தேதி தொடங்குகிறது.

கடைசி தேதி: 09.05.2025

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web