அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

 
Two Women walked in rain with umbrella

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய மே 4ம் தேதி முதல் வெயில் கொளுத்தி வருகிறது. கோடை மழை காரணமாக சற்றே குறைந்திருந்த வெயில் தற்போது 18க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. இந்நிலையில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Rain Womens Walking

அதன்படி தமிழகத்தில்  தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட தமிழகத்தில் இன்று வெயில் 5 டிகிரி வரை அதிகரிக்கும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரியாக இருக்கலாம்.  இதனால் காலை 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் ஏற்கனவே வேலூரில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு வெயில் படிப்படியாக குறையத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்த செய்திக்குறிப்பில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் , புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  அதே நேரத்தில் இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் மே 21ம் தேதி வரை தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

அக்னி  நட்சத்திரம் மே 29ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில் இன்னும் 2 நாட்களில் சென்னையில் கடற்காற்று மிதந்து வரத் தொடங்கும் என உற்சாகமான செய்தியை வெதர்மேன் வெளியிட்டுள்ளார்.  வெயிலின் தாக்கத்தால் தற்போது இரவு நேரங்களில் அதிக புழுக்கமும் அனலும் அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.   சென்னையை பொறுத்தவரை அனற்காற்றால் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.  காலை 11 மணிக்கு கடல் காற்று வீசியதாகவும், இதனால் சென்னையில் கடலோர நகரங்களில் உள்ள மக்களுக்கு வெயிலில் இருந்து ஓய்வு கிடைக்கும் எனக் கூறியிருந்தார்.

வெயில் , மழை

நேற்று மாலை முதலே சென்னையின் பல இடங்களில் இதமான காற்று வீசியது. இந்நிலையில் இன்றும் இது குறித்து  பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில்  சென்னையில் இன்றும் அதிகாலை கடல் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.ஆனால் சென்னை நகரின் மேற்கு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் தொடர்ந்து சூடாக இருக்கும் எனவும்  கடல் காற்று அங்கு செல்ல நேரம் எடுக்கும் எனவும்  பதிவிட்டுள்ளார்.  அதே நேரத்தில் கரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், மதுரை மற்றும் திருவண்ணாமலை,  தூத்துக்குடியின் சில பகுதிகள், நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகளில் வெயில் அதிகமாக பதிவாகும். சென்னை, வேலூர், திருத்தணி பெல்ட் மற்றும் கரூர், புறநகர்ப் பகுதிகள் ஹாட் சார்ட்களில் முதலிடத்தைப் பிடிக்கும் என  பதிவிட்டுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web