அதிமுகவில் பண மழை.. ரூ.1 கோடி பேரம்.. விரைவில் வீடியோ! கெத்து காட்டும் ஓபிஎஸ்!

 
முனுசாமி

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகள் முழுவீச்சில் சண்டைபோட்டு வருகின்றனர். அவ்வப்போது இரு அணிகளின் தலைவர்களும் எதிரணியினர் மீது பகீரங்கமாக குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்துகின்றனர். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில், தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், வடசென்னை மாவட்ட செயலாளருமான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட ஆடியோ பரபரப்பை கூட்டியுள்ளது. இவர் நேற்று சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கே.பி.முனுசாமி அளித்துள்ள பேட்டியில், ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கட்சிக்கு வந்தால் கூட உண்மையாக உழைப்பாரா என்று கேட்டுள்ளார். கே.பி.முனுசாமிக்கு, அடையாளமே ஓபிஎஸ்தான். இவர் காசு வாங்கிவிட்டு, அன்புமணிக்கு உழைத்து கொடுத்தார். எனவே தான், ஜெயலலிதா உங்களை அமைச்சர், மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார். 

முனுசாமி

இப்போது கூட கே.பி.முனுசாமி, அதிமுக தொண்டர்களிடம் பணம் வசூலித்து விட்டு, மாவட்ட செயலாளர் பதவி, எம்எல்ஏ பதவி வாங்கி தருவேன் என்கிறார். எங்க பசை இருக்கிறதோ அங்கு ஒட்டுவார் கே.பி.முனுசாமி. 

நான், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு கே.பி.முனுசாமியிடம் வாய்ப்பு கேட்டேன். அப்போது, கட்டாயம் நான் வாங்கி தருவேன். அதற்காக ரூ.1 கோடி தர வேண்டும் என்று கேட்டார்.  இப்போது என்னிடம் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஒரு கோடி பணம் கேட்ட ஆடியோவை ரிலீஸ் செய்கிறேன்.

இதற்கு கே.பி.முனுசாமி பதில் சொல்லவில்லை என்றால், வீடியோவை வெளியிடுவேன். அதாவது, தங்கமணி, வேலுமணியிடம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் கீழ்பாக்கத்தில் பேசிய வீடியோ அது. ஒழுங்காக வாயை மூடிக்கொண்டு, ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் வேலையை பார்க்க வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து கே.பி.முனுசாமியிடம் தான் பேசிய ஆடிய ஒன்றை வெளியிட்டார். அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ள உரையாடல்களை விரிவாக உள்ளன. அதில்,

கிருஷ்ணமூர்த்தி: அண்ணே, இப்போது ரூ.50 லட்சம் ரெடி பண்ணி இருக்கேன். மதியத்துக்குள்ள மீதி 50 ரெடி பண்ணிட்டு சொல்றேன். இதை எப்படின்னா தரணும்.

முனுசாமி

கே.பி.முனுசாமி: என் மகனை அனுப்பி வைக்கிறேன். இப்போ உடனே அனுப்பி வைக்கட்டுமா.

கிருஷ்ணமூர்த்தி:  இல்லண்ணா. கரெக்டா ஒரு 11 மணிக்கு..

கே.பி.முனுசாமி: இல்லப்பா, இப்போ ஊரில் இருந்து அனுப்பினா தான், கரெக்டா 11 மணிக்கு அங்க வருவான்.

கிருஷ்ணமூர்த்தி: அனுப்பி விட்டுடுங்கண்ணா. நன்றிங்கண்ணா..

இதைத் தொடர்ந்து கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்னொருவருடன் பேசுகிறார். அதில், கே.பி.முனுசாமியிடம் பேசினேன். அண்ணனும் அவர் தனது மகனை அனுப்புவதாக சொன்னார். இப்ப அவரு (கே.பி.முனுசாமி) எங்க இருக்கிறார். சென்னையில் இருக்கிறாரா? நாம முந்த வேண்டாம். அவரே வரட்டும். முதலில் 50 ரூபாய் கொடுப்போம். பிறகு பேசிக்கலாம். நான் பழனி அண்ணனை நம்புகிற மாதிரி இல்ல. அவரு ஒரு மாதிரி டைப்’ என்று பேசும் மற்றொரு ஆடியோவும் வெளியாகி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

  

From around the web