கடலோர மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு கனமழை அலெர்ட் … !

 
மழை

தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் இருந்து வடக்கு கேரள கடலோரம் வரை கிழக்கு வளிமண்டல காற்றலை நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தின் சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை ஜனவரி 26-ம் தேதி உள் தமிழகத்தின் சில பகுதிகளிலும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை தொடரக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 27-ம் தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!