ரஷ்யாவின் வெற்றி தினவிழாவில் ராஜ்நாத் சிங் பங்கேற்பார்... மத்திய அரசு அறிவிப்பு!

ரஷ்யாவில் நடைபெற உள்ள ராணுவ அணிவகுப்பு கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
2ம் உலக போரில் ஜெர்மனியின் நாஜி படைகளை சோவியத் யூனியன் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தரும்படி பிரதமர் மோடிக்கு ரஷ்யா அழைப்பு விடுத்திருந்தது. எனினும், ரஷ்யாவின் இந்த வெற்றி தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக, இந்தியா சார்பில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்வார். இதனை ரஷ்யாவின் அதிபருக்கான செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தி உள்ளார்.
இது பற்றி ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், மாஸ்கோவில் நடைபெற உள்ள ராணுவ அணிவகுப்பு கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தியா சார்பில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொள்வார் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதனை அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் நேற்று உறுதிப்படுத்தி உள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது