தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் ? இன்று அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்.பிக்களுக்கான தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெற உள்ளது. அந்த வகையில் திமுக மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 4 வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்நிலையில், அதிமுக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 2 பேர் யார்? என்ற கேள்வி நிலவி வருகிறது.

எம்பி சீட் கேட்டு நெருக்கடியால், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், மாநிலங்களவை சீட் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, நேற்றைய தினம் தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ் சந்தித்து பேசிய நிலையில், இன்று அதுகுறித்த தங்களின் நிலைப்பாட்டை அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது

முன்னதாக, தேமுதிக பொதுச் செயலாலர் பிரேமலதா விஜயகாந்த், ”தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. அவ்வாறு கொடுக்கவில்லை எனில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினால்தான் பொதுமக்கள் நம்புவார்கள்” என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
