இன்று சென்னையில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 
ஸ்டாலின் கடிதம்

இன்று மே 10ம் தேதி, சென்னையில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டிஜிபி அலுவலகம் முதல் தீவுத்திடல் பேரணி நடைபெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.

பாகிஸ்தான் சிந்தூர்

அதனை வெளிப்படுத்தும் வகையில், இன்று மாலை 5 மணிக்கு எனது தலைமையில் பேரணி நடைபெற உள்ளது. அதன்படி, சென்னையிலுள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்குபெறும் இந்த பேரணி தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் அருகில் நிறைவு பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

சிந்தூர்

இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்த பேரணியில் பங்கேற்று, நமது ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web