ரம்ஜான் பண்டிகை... ஒரே நாளில் ரூ.10 கோடியைத் தாண்டிய ஆடுகள் விற்பனை!

ரம்ஜான் பண்டிகையொட்டி தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற சந்தைகளில் ஆடுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
ரம்ஜான் பண்டிகை வருகிற மார்ச் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு கால்நடை சந்தைகளில் ஆடுகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது. குறைந்தபட்சம் ரூ.5,000 முதல் அதிகபட்சம் ரூ.40,000 வரை ஆடுகள் விற்கப்படுகின்றன.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி பெரம்பலூர், கிருஷ்ணகிரி, வள்ளியூர், திருமங்கலம், செஞ்சி, புதுக்கோட்டை, வேப்பூர் ஆகிய ஆட்டுச் சந்தைகளில் இன்று ஆடுகள் விற்பனை அமோகம் அடைந்துள்ளது. பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக கிருஷ்ணகிரி சந்தையில் இன்று மட்டும் சுமார் ரூ.10 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!