இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம்... பெயர் சேர்க்க, திருத்த , வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க!

 
ரேஷன்கார்டு குறைதீர்க்கும் முகாம்

தமிழகத்தில் மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன்கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பொதுவிநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் 2ம் சனிக்கிழமை மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், ஏப்ரல் மாதத்திற்கான மக்கள் குறைதீர் முகாம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.  

ரேஷன்

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இம்முகாமில், பொதுவிநியோகத் திட்டம் சார்ந்த பல்வேறு சேவைகள் வழங்கப்படும்.

சிறப்பு முகாம்

இந்த முகாம்களில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு அல்லது மாற்றம் போன்ற சேவைகள் செய்து கொள்ளலாம். மேலும், ரேஷன்கடைகளில் பொருள் பெற இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக அங்கீகாரச் சான்று வழங்கப்படும். ரேஷன்கடைகளின் செயல்பாடுகள் மற்றும் சந்தைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து புகார்கள் இருந்தால், அவற்றை இம்முகாமில் தெரிவித்து உடனடியாக தீர்வு பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web