ரவி மோகனின் ப்ரோ கோட் பட பெயரைத் தடுக்கக்கூடாது... உயர்நீதிமன்றம் உத்தரவு!
ரவி மோகன் தயாரித்து, நடித்து வரும் ப்ரோ கோட் திரைப்படத்தின் பெயரைத் தடுக்கக்கூடாது என மதுபான நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் ப்ரோ கோட் படத்தை கார்த்தி யோகி இயக்குகிறார். இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், ப்ரோ கோட் படத்தின் பெயருக்கு தடை விதிக்கக்கோரி, தில்லி உயர் நீதிமன்றத்தில் இண்டோ-ஸ்பிரிட் பிவரேஜஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ஏனெனில், இந்நிறுவனமும் ப்ரோ கோட் என்ற பெயரில் மதுபானம் தயாரித்து வருகிறது.
இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், "ஒரே மாதிரியான வணிகச் சின்னத்தைப் பயன்படுத்துவது முதல் பார்வையிலேயே விதிமீறல் எனத் தெரிவதாகவும் இதனால், நுகர்வோர் மத்தியில் குழப்பம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

ஆகையால், வழக்கு முடியும்வரையில் திரைப்படத்தின் விளம்பரங்களுக்கோ வெளியீட்டுக்கோ ப்ரோ கோட் என்ற பெயரைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, ரவி மோகன் தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில், "ரவி மோகனின் ப்ரோ கோட் திரைப்படத்தின் பெயரைப் பயன்படுத்த மதுபான நிறுவனம் தடுக்கக்கூடாது" என்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
