அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட்!

 
red
 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை இடைவிடாமல் கொட்டியபடி தொடர்கிறது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் பெய்த மழை தற்போது மேலும் தீவிரமாகி வருகிறது. எழும்பூர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் போன்ற பகுதிகளில் லேசான மழை பதிவாக, திருவள்ளூரின் மீஞ்சூரில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

ரெட்

இந்த சூழலில், அடுத்த 3 மணி நேரத்திற்கு வட சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இரவு   இடி–மின்னலுடன் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்

மேலும், இரவு   அரியலூர், கோவை, கடலூர், திண்டுக்கல், குமரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!