பிரபல ரெளடி வெட்டிக் கொலை... தலைநகரில் பரபரப்பு!

 
சத்யா
 சென்னை அண்ணா நகா் அன்னை சத்யா நகரில் வசித்து வருபவர்  எட்வீன். இவரது மகன் ராபர்ட் (எ) சின்ன ராபா்ட். 28 வயதான இவா் மீது கொலை, வழிப்பறி உட்பட மொத்தம் 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் திருநங்கை உடன் வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது.  இந்நிலையில், புதன்கிழமை அன்னை சத்யா நகா் முதல் தெருவில் சின்ன ராபா்ட் நின்று கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 போ் கொண்ட கும்பல், அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி சென்றுவிட்டது.    

ஆம்புலன்ஸ்

தகவல் அறிந்து  சம்பவ இடத்துக்கு வந்த  போலீஸாா் ராபா்ட்டின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இது குறித்த  விசாரணையில்  2019ல் ராபா்ட்டின் நண்பரான கோகுல் என்பவரை அயனாவரத்தில் வசித்து வந்த  ரெளடி லோகு தரப்பு கொலை செய்தது. இந்தக் கொலைக்கு பழி வாங்க சின்ன ராபா்ட் காத்திருந்தார்.  சுதாரித்துக்கொண்ட அயனாவரம் லோகு கும்பலைச் சோ்ந்தவா்கள்தான் இந்தக் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில்  போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

போலீஸ்


இதேபோன்று அயனாவரம் பகுதியில் பெண் ஒருவரை அதே மர்ம கும்பல் ஈவு இரக்கமின்றி மிக கொடுரமாக தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றுள்ளது.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அண்ணா நகா் போலீஸாா் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டு  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு  தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த கொலை சம்பவங்கள் குறித்து பல சந்தேக கோணங்களில் அண்ணா நகர் மற்றும் அயனாவரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web