ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க... அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

 
கன மழை

தமிழகம் முழுவதுமே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஞாபகத்துல வெச்சுக்கோங்க... இன்னும் அக்னி வெய்யிலோ, கத்திரி வெய்யிலோ, கோடை வெய்யிலோ ஆரம்பிக்கலை. இயற்கை மாற்றத்தால வருஷா வருஷம் வெய்யிலடிச்சாலும் அதிகமாக தான் இருக்கு. மழை பெய்தாலும் வீடுகளுக்குள்ள தண்ணீர் தேங்குகிற மாதிரி தான் மழை பெய்யுது. இந்நிலையில், சந்தோஷமான செய்தியைச் சொல்லியிருக்கு சென்னை வானிலை ஆய்வு மையம்.

மழை

தமிழகத்தில், இந்த வெய்யிலுக்கு இதமா அடுத்த வரும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்திருக்கு. தற்போது தமிழகத்தின் மேல் நிலவி வரும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வு நிலவி வருவதால், மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. 

மழை மற்றும் குளிர் காலங்களில் தயிர் சாப்பிடலாமா கூடாதா?

இன்றும் தமிழகத்தில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், அடுத்து வரும் நாட்களில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்லது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web