மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 6,000 கன அடியாக அதிகரிப்பு!
டெல்டா பாசனப் பகுதிகளில் நிலவி வரும் அதிகத் தண்ணீர் தேவையைக் கருத்தில்கொண்டு, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1,000 கன அடியாகத் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. டெல்டா பகுதிகளில் மழை நின்றதால், பாசனத் தேவை அதிகரித்தது. இதனால், கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி முதல் நீர் திறப்பின் அளவு வினாடிக்கு 3,000 கன அடியாக உயர்த்தப்பட்டது.

தற்போது பாசனத் தேவை மேலும் அதிகரித்துள்ளதால், நேற்று காலை முதல் இந்த அளவு 6,000 கன அடியாக மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,459 கன அடியாக மட்டுமே உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட நீர்வரத்து குறைவாக இருப்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் குறைய வாய்ப்புள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 116.22 அடியாக இருந்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
