நெகிழ்ச்சி!! மாற்றுத்திறனாளியை தூக்கி நலம் விசாரித்த அல்லு அர்ஜுன்!!

 
அல்லு அர்ஜுன்

டோலிவுட் திரையுலகில் முண்ணனி கதாநாயகர்களில் ஒருவர் அல்லு அர்ஜூன். கொரோனா காலகட்டத்தில் வெளியான இவரின் புஷ்பா படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிசில் இடம் பிடித்து சுமார் 350 கோடிகளை வசூலித்து தந்தது. புஷ்பா  படத்தின் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த இவர் தற்போது அதன் 2வது பாகமான “புஷ்பா 2” படத்தில் நடித்து வருகிறார்.

புஷ்பா

தற்போது விசாகப்பட்டினத்தில் இந்த படத்திற்கான  படப்பிடிப்புக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அல்லு அர்ஜுன்  அவ்வப்போது தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். புஷ்பா 2 படப்பிடிப்பின் பிசி ஷெட்யூலுக்கு நடுவே கிடைத்த ஓய்வு நேரத்தில் ஐதராபாத்தில் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்தார் அல்லு அர்ஜுன். அப்போது மாற்றுத்திறனாளி இளைஞரும் அவரை பார்க்க வந்திருந்தார்.

புஷ்பா2
நடக்க கூட முடியாத அவரிடம் நலம் விசாரித்த அல்லு அர்ஜூன் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் அந்த மாற்றுத்திறனாளியை தூக்கி அணைத்து பிடித்துக் கொண்டார். இச்சம்பவம் காண்பவர்களை நெகிழ்ச்சி அடைய செய்து விட்டது. இந்த புகைப்படம் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.  எதேச்சையாக நடந்த இந்நிகழ்வு மீடியாவுக்காக  நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே இந்த புகைப்படம் சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளது என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அத்துடன் அல்லு அர்ஜுனுக்கு வாழ்த்துக்களையும் அவரது எளிமையையும் கொண்டாடி பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web