நெகிழ்ச்சி வீடியோ!! மணப்பெண்ணை பிரிய மறுத்து கண்ணீர் விட்டு கதறி அழுத நாய்!!

 
சுகப்பிரியா

வீட்டில் என்ன தான் செல்லப்பிராணிகள் வளர்த்தாலும் அவைகளில் நாய் தான் நன்றியும், விசுவாசமும் உடையது. எங்கே சென்றாலும் கூடவே செல்வது மட்டுமல்ல. வளர்த்தவர்களுக்கு ஆபத்து என்றால் நாய் தான் முதலில் நின்று எஜமானரை காக்கும். அதன் பாசத்திற்கும், நன்றிக்கும் அளவே கிடையாது. நாயை போல் நன்றியுடைவனாக இரு என்ற பழமொழி அதனால் தான் வந்தது.  வீட்டுக்குள் ஏதேனும் விலங்குகளோ, பாம்புகளோ புகுந்தால் அவற்றை விரட்டியடித்து சில நேரங்களில் தன் உயிரை கொடுத்து எஜமான் குடும்பத்தை காக்கும்.  அதே போல் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்துள்ளது.  


நாகர்கோவில் அருகே உள்ள சித்திரை திருமகாராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் சுயம்பு செல்வன். இவருடைய மகள் 21 வயது சுகப்பிரியா .  இவர் ஒரு பொறியியல் பட்டதாரி.  இவருக்கும், நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியை சேர்ந்த என்ஜினீயரான அசோக் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் அருகே முகிலன்விளையில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.  திருமணம் முடிந்த பிறகு  மணப்பெண் வீட்டில் இருந்து  சுகப்பிரியா புகுந்த வீட்டுக்கு புறப்படும் சடங்கு நடந்தது. அப்போது மணப்பெண்ணின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவரை கண்ணீர் மல்க வழியனுப்பினர்.  அதே நேரத்தில் அவர் வளர்த்த நாய் சுகப்பிரியாவுடன் பாசப்போராட்டம் நடத்தியது.  எஜமான் குடும்பத்தினர் சுகப்பிரியாவை கட்டி அணைத்து கண்ணீர் விட்டதால் அவர் எங்கோ நம்மை விட்டு பிரிந்து செல்கிறார் என நினைத்து அந்த நாயும் தொடர்ந்து குரைத்தது. வளர்ப்பு நாயின் அருகே மணப்பெண் சென்ற போது, அந்த நாய் தனது முன்னங்கால்களை தூக்கியும், வாலை பலமாக ஆட்டியும் தனது பாசத்தை வெளிப்படுத்தியது. மணமகளின் மேலே தாவி, தாவி தனது பாச மழையை பொழிந்தது.

சுகப்ப்ரியா

மேலும் அந்த நாயின் நடவடிக்கைகள் "என்னை விட்டு பிரிய போகிறாயா?"என்கின்ற தொனியில் இருந்தது. சுகப்பிரியாவும் மிகவும் பாசத்துடன் வளர்ப்பு நாயை சமாதானப்படுத்தினார். நான் அடிக்கடி நமது வீட்டுக்கு வருவேன், உன்னை பார்க்க கண்டிப்பாக வருவேன் என கண்கலங்கியபடி நாயை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். சமாதானம் ஆகாத நாய் அவரது சேலையை பிடித்து இழுத்து கண்ணீர்விட்டது. இந்த நெகிழ்ச்சி சம்பவம் இந்த பாசப்போராட்டம், அங்கு திரண்டிருந்த உறவினர்களையும் கண் கலங்க வைத்தது. மணப்பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், "கல்லூரி மற்றும் வெளியிடங்களுக்கு சுகப்பிரியா சென்றுவிட்டால் அவர் வரும் வரை நாய்  காத்திருக்கும். அவரது இருசக்கர வாகனத்தின் சத்தம் கேட்டதும் கட்டி வைக்கப்பட்ட நிலையிலும் நாய் அங்கும் இங்கும் ஓடி தனது வாலை ஆட்டி பாசத்தை வெளிப்படுத்தும்" எனத் தெரிவித்தனர். இந்த  நாய்க்கும், மணப்பெண்ணுக்கும் இடையே நடந்த பாசப்போராட்டத்தை வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web