நெகிழ்ச்சி வீடியோ... அடி பட்டுடுச்சா....? தடுக்கி விழுந்த பெண்… கும்பலாக ஓடி வந்து கவனிக்கும் நாய்கள் !

நாய்கள் பொதுவாக உரிமையாளர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பவை. இதனை அவ்வப்போது நிகழும் சம்பவங்கள் உணர்த்திக் கொண்டே உள்ளன. அந்த வகையில் சமீபத்தில் செல்லப்பிராணிகளின் அன்பை வெளிப்படுத்தும் விதமான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் கிளினிக்கில் நாய்களின் அருகில் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு நாயின் மீது மிதித்து தவறி கீழே விழுந்தார்.
இதனால், அருகில் இருந்த நாய்கள் அதிர்ச்சி அடைந்து, முதலில் அந்த பெண் பாதுகாப்பாக இருக்கிறாரா என்பதை பார்ப்பதற்காக அவரை சூழ்ந்துகொண்டன.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
The dogs were so worried.. 🥺 `
— Buitengebieden (@buitengebieden) March 14, 2025
நெட்டிசன்கள் பலரும் “நாய்களின் உண்மையான அன்பை இதைவிட வேறு எதனால் நிரூபிக்க முடியும்?” என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் உறுதியாக தெரியவில்லை. இருந்தாலும், நாய்களின் எளிமையான அன்பும், உரிமையாளர்களிடம் அதீத நெருக்கமும் இருப்பதை இந்த வீடியோ மூலம் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!